திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: கேள்வி / Hearing

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.



வழுக்கும் இடத்திற்கு உதவும் ஊன்றுக்கோல் போலவே ஒழுக்கமானவர்களின் வார்த்தைகள் உதவும்.



கல்லாதவன் ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச் சொற்கள், வழுக்கல் உடைய சேற்று நிலத்தில் ஊன்றுகோல் போல் வாழ்க்கையில் உதவும்.



கற்று, ஒழுக்கம் மிக்கவரின் வாயிலிருந்து பிறந்த சொற்கள் வழுக்கும் தரையில் ஊன்றுகோல் உதவுவது போல் துன்ப நேரத்தில் உதவும்.



வழுக்கு நிலத்தில் நடப்பதற்கு ஊன்றுகோல் உதவுவது போல் ஒழுக்கம் உடையவர்களின் அறிவுரையானது உதவும்.


Like staff in hand of him in slippery ground who strays
Are words from mouth of those who walk in righteous ways.


The words of the good are like a staff in a slippery place.



izhukkal udaiyuzhi ootrukkoal atrae
ozhukka mudaiyaarvaaich sol


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

உயர் ஞானம் எனப்படும் நாத அனுபவத்தை செவி தருவதால் அச் செல்வம் செல்வத்திற்கெல்லாம் முதன்மையானது. நாத ஒலி குறைந்தால் வயிற்றுக்கு உணவு தர வேண்டும். செவியின் சுவை உணர்ந்தவரே ஆன்றோர். அவர்கள் பிழைப்புக்காக முட்டாள்தனமான செயல்கள் செய்வதில்லை. நாத அனுபவம் அற்றவர் பணிவாக நடப்பதில்லை. செவியின் சுவையை உணராமல் வாய்ச் சுவைக்கே முன்னுரிமைத் தரும் மனிடப் பதர்கள் வாழ்வதும் சாவதும் ஒன்றே.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.