திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: ஊழ் / Fate

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.



இரண்டு வேறுபாடுகள் உலகத்தில் இயற்கையாக அமைந்துள்ளது மதிக்கப்படுபவராக இருத்தல் வேறு தெளிந்த ஞானம் உள்ளவராக இருத்தலும் வேறு.



உலகத்தின் இயற்க்கை ஊழின் காரணமாக இரு வேறு வகைப்படும், செல்வம் உடையவராதலும் வேறு அறிவு உடையவராதலும் வேறு.



உலகின் இயல்பு இருவகைப்பட்டது; செல்வரை ஆக்கும் விதியும், அறிஞரை ஆக்கும் விதியும் வேறு வேறாம்.



உலகின் இயற்கை நிலை இரு வேறுபட்டதாகும். ஒருவர் செல்வமுடையவராகவும், ஒருவர் அறிவுடையவராகவும் இருப்பதே அந்த வேறுபாடாகும்.


Two fold the fashion of the world: some live in fortune's light;
While other some have souls in wisdom's radiance bright.


There are (through fate) two different natures in the world, hence the difference (observable in men) in (their acquisition of) wealth, and in their attainment of knowledge.



iruvaeRu ulakaththu iyaRkai thiruvaeRu
theLLiya raadhalum vaeRu


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

பிறவிப் பயன் பொருத்தே ஆர்வமும் சோர்வும் தோன்றுகிறது. அறிவு சார்ந்த நூல்கள் கற்றாலும் தன் பிறவி அறிவே மேலோங்கி இருக்கிறது. தவறு சரியாகவும் சரி தவறாகவும் பிறவிப்பயனால் மாறுகிறது. இரு வேறு உலகம் இருக்கிறது திருவுடையவன் தெளிந்தவன் என உயர்வைதருகிறது. விதி என்ற பிறவிப் பயன் மட்டுமே மற்றவே முடியாத நிலையில் இருக்கும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.