திருவள்ளுவரின் திருக்குறள்

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.



மனதளவிலேயே மாசு இல்லாமல் இருத்தலே அனைத்திற்கும் அறம் மற்றவை நீர்த்துவேடும்.



ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே: மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.



மனத்து அளவில் குற்றம் இல்லாதவனாய் ஆகுக; அறம் என்பது அவ்வளவே; பிற வார்த்தை நடிப்பும், வாழ்க்கை வேடங்களுக்கும் மற்றவர் அறியச் செய்யப்படும் ஆடம்பரங்களே.



மனம் தூய்மையாக இருப்பதே அறம்; மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை.


Spotless be thou in mind! This only merits virtue's name;
All else, mere pomp of idle sound, no real worth can claim


Let him who does virtuous deeds be of spotless mind; to that extent is virtue; all else is vain show



manaththukkaN maasilan aadhal anaiththaRan
aakula neera piRa


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

மனதால் நேர்மையடன் இருப்பதே அறம், அப்படி அறமுடன் இருப்பவர்க்கு செல்வமும், சிறப்பும் வளரும், மறுப்பவர் வாழ்வில் விழ்ச்சி உறுதி. அழிக்கும் குணம்,அளவற்ற ஆசை,கடுங் கோபம்,வன்மையான வார்த்தை இவை நான்கும் இல்லாமல் இருப்பதே அறம். அடுத்தவர் மதிக்கப்பட வேண்டும் என்று அறத்தை செய்யாமல் தனக்காக செய்யவேண்டும். அடிமையாக இருப்பது அறமாகாது. அறமே இன்பத்தை தரும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.