திருவள்ளுவரின் திருக்குறள்

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.



ஏற்கும் வகையில் இருப்பதே அறச் செயல், ஏற்க முடியாதது எப்படியாவது எல்லாவற்றையும் செய்வது.



செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.



இடைவிடாமல் இயன்ற மட்டும் எல்லா இடங்களிலும் அறச்செயலைச் செய்க.



செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும்.


To finish virtue's work with ceaseless effort strive,
What way thou may'st, where'er thou see'st the work may thrive


As much as possible, in every way, incessantly practise virtue



ollum Vakaiyaan aRavinai Ovaadhe
sellumvaai ellaaGn cheyal


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

மனதால் நேர்மையடன் இருப்பதே அறம், அப்படி அறமுடன் இருப்பவர்க்கு செல்வமும், சிறப்பும் வளரும், மறுப்பவர் வாழ்வில் விழ்ச்சி உறுதி. அழிக்கும் குணம்,அளவற்ற ஆசை,கடுங் கோபம்,வன்மையான வார்த்தை இவை நான்கும் இல்லாமல் இருப்பதே அறம். அடுத்தவர் மதிக்கப்பட வேண்டும் என்று அறத்தை செய்யாமல் தனக்காக செய்யவேண்டும். அடிமையாக இருப்பது அறமாகாது. அறமே இன்பத்தை தரும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.