திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: கொல்லாமை / Not killing

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.



ஒரே நல்லது கொல்லாமை மற்றப்படி அதற்க்கு பின்னே உள்ள பொய்யாமை நன்று.



இணையில்லாத ஓர் அறமாகக் கொல்லாமை நல்லது, அதற்கு அடுத்த நிலையில் கூறத்தக்கதாகப் பொய்யாமை நல்லது.



உயிர்களைக் கொல்லாத செயல், அறங்களுள் எல்லாம் சிறந்த தனி அறமாம். அதற்கு அடுத்துச் சிறந்த அறம் பொய்யாமை.



அறங்களின் வரிசையில் முதலில் கொல்லாமையும் அதற்கடுத்துப் பொய்யாமையும் இடம் பெறுகின்றன.


Alone, first of goods things, is 'not to slay';
The second is, no untrue word to say.


Not to destroy life is an incomparably (great) good next to it in goodness ranks freedom from falsehood.



ondraaka nalladhu kollaamai matradhan
pinsaarap poiyaamai nandru


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

அறமான செயல் என்பது அழிக்காமல் இருப்பதே இதனால் மற்ற அறச்செயல்கள் தானாக வரம்படும். எல்லா உயிர்களுடன் பகுத்து உண்பதே நூல் தரும் கருத்துக்களில் எல்லாம் தலைச் சிறந்தது. தேவையின்றி அழிப்பவன் தலை இல்லாத முண்டம் போன்றவன்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.