திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: கொல்லாமை / Not killing

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.



பகிர்ந்து உண்ணுவதும் பல உயிர்களை காப்பதும் படித்தவர் சிறப்பித்து தந்த எல்லாவற்றிலும் முதன்மையானது.



கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.



இருப்பதைப் பகிர்ந்து உண்டு, பல உயிர்களையும் பாதுகாப்பது, நூல் எழுதியவர்கள் தொகுத்த அறங்களுள் எல்லாம் முதன்மையான அறமாகும்.



இருப்போர் இல்லாதோர் என்றில்லாமல், கிடைத்ததைப் பகிர்ந்துகொண்டு, எல்லா உயிர்களும் வாழ வேண்டும் என்ற சமநிலைக் கொள்கைக்கு ஈ.டானது வேறு எதுவுமே இல்லை.


Let those that need partake your meal; guard every-thing that lives;
This the chief and sum of lore that hoarded wisdom gives.


The chief of all (the virtues) which authors have summed up, is the partaking of food that has been shared with others, and the preservation of the mainfold life of other creatures.



pakuththuNdu palluyir Ompudhal nooloar
thokuththavatruL ellaanh thalai


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

அறமான செயல் என்பது அழிக்காமல் இருப்பதே இதனால் மற்ற அறச்செயல்கள் தானாக வரம்படும். எல்லா உயிர்களுடன் பகுத்து உண்பதே நூல் தரும் கருத்துக்களில் எல்லாம் தலைச் சிறந்தது. தேவையின்றி அழிப்பவன் தலை இல்லாத முண்டம் போன்றவன்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.