திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: வெகுளாமை / Restraining Anger

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.



மரணித்தவர் (சினம் கொண்டவர்) மரணித்தவருக்கு ஒப்பானவர் சினத்தை விட்டோழித்தவர் துறவிக்கும் துனையாகிறார்.



சினத்தில் அளவு கடந்து சென்றவர் இறந்தவரைப் போன்றவர், சினத்தை அடியோடு துறந்தவர் துறந்தவர்க்கு ஒப்பாவர்.



பெருங்கோபம் கொண்டவர் இருந்தாலும் இறந்தவரைப் போன்றவரே; கோபத்தை விட்டுவிட்டவர். இறக்க வேண்டியவரே என்றாலும் சாவைத் தவிர்த்தவர் போன்றவரே.



எல்லையற்ற சினம் கொள்வார் இறந்தவர்க்கு ஒப்பாவார். சினத்தை அறவே துறந்தவர் துறவிக்கு ஒப்பாவார்.


Men of surpassing wrath are like the men who've passed away;
Who wrath renounce, equals of all-renouncing sages they.


Those, who give way to excessive anger, are no better than dead men; but those, who are freed from it, are equal to those who are freed (from death).



iRandhaar iRandhaar anaiyar sinaththaith
thuRandhaar thuRandhaar thuNai


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

சினம் செல்லுபடி ஆகாத இடத்தில் காப்பது பயன் அற்றது. சினம் தீமை பயப்பதால் அதை மறத்தல் வேண்டும். மகிழ்வையும் கொண்டாட்டத்தையும் அழிக்கும் பகைவனாக சினம் இருக்கிறது. தனக்கும் தன் இனத்திற்கும் எதிரியாக இருக்கும் சினத்தை தவிர்போம். உள்ளதை அடையும் ஆற்றலை இழக்கச் செய்யும் சினம். சினத்தை துறந்தவர் துறவிக்கும் மேலானவர்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.