திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: வெகுளாமை / Restraining Anger

உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.



நினைத்ததை எல்லாம் உடனே அடையும் உள்ளத்தில் சினம் இருந்தால் எப்படி சாத்தியமாகும்?



ஒருவன் தன் மனதால் சினத்தை எண்ணாதிருப்பானானால் நினைத்த நன்மைகளை எல்லாம் அவன் ஒருங்கே பெறுவான்.



உள்ளத்துள் கோபம் கொள்ள ஒருபோதும் எண்ணாதவன், தான் நினைத்ததை எல்லாம் உடனே அடைவான்.



உள்ளத்தால் சினங்கொள்ளாதவனாக இருந்தால் எண்ணியவற்றையெல்லாம் உடனடியாகப் பெற முடியும்.


If man his soul preserve from wrathful fires,
He gains with that whate'er his soul desires.


If a man never indulges anger in his heart, he will at once obtain whatever he has thought of.



uLLiya thellaam udaneydhum uLLaththaal
uLLaan vekuLi enin


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

சினம் செல்லுபடி ஆகாத இடத்தில் காப்பது பயன் அற்றது. சினம் தீமை பயப்பதால் அதை மறத்தல் வேண்டும். மகிழ்வையும் கொண்டாட்டத்தையும் அழிக்கும் பகைவனாக சினம் இருக்கிறது. தனக்கும் தன் இனத்திற்கும் எதிரியாக இருக்கும் சினத்தை தவிர்போம். உள்ளதை அடையும் ஆற்றலை இழக்கச் செய்யும் சினம். சினத்தை துறந்தவர் துறவிக்கும் மேலானவர்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.