திருவள்ளுவரின் திருக்குறள்

அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்.



அருள் அற்றது எது என்றால் உயிர்களை அழிக்காமல் இருப்பதை அழிப்பது பொருள் அற்றது அந்த உடல் உண்ணுவது.



அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல் அருளல்லாது எது என்றால் உயிர்களைக்கொள்ளுதல் அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது.



இரக்கம் எது என்றால் கொலை செய்யாமல் இருப்பதே; இரக்கம் இல்லாதது எது என்றால் கொலை செய்வதே; பாவம் எது என்றால் இறைச்சியைத் தின்பதே.



கொல்லாமை அருளுடைமையாகும்; கொல்லுதல் அருளற்ற செயலாகும். எனவே ஊன் அருந்துதல் அறம் ஆகாது.


'What's grace, or lack of grace'? 'To kill' is this, that 'not to kill';
To eat dead flesh can never worthy end fulfil.


If it be asked what is kindness and what its opposite, the answer would be preservation and destruction of life; and therefore it is not right to feed on the flesh (obtained by taking away life).



aruLalla thiyaadheniR kollaamai koaRal
poruLalla thavvoon thinal


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

உடல் வளர்கவே உணவு என்ற எண்ணம் தவறு அருளை வளப்பதே அவசியம். உணவின் மீது ஆர்வம் அதிகரித்தால் அருள் விலகும், பொருள்கள் மீது ஆர்வம் குறைந்தால் பொருள் விலகும். உணவின் சுவை படை கொண்டவர் மனநிலைப் போல் நன்மைகளை நாடாது. உயிரின் இயல்பை வளர்க்க உணவு அவசியமில்லை. உணவிற்கு விலை கொடுக்க மறுத்தால் உற்பத்தி செய்பவரும் இல்லாமல் போவர்கள். புலன் என்ற ஒருமையின் பன்மை சொல்லாகவும் புலால் இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது. கொல்லாதவரை புலன்கள் அடங்கி மறுக்கப்பட்டவரை எல்லா உயிரும் போற்றும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.