திருவள்ளுவரின் திருக்குறள்

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்.



படைகள் வைத்திருப்பவர் நெஞ்சம் போலவே நல்லதை நினைக்காது ஒன்றின் உடல் சுவையை விரும்புபவர் மனம்.



ஓர் உயிரின் உடம்பைச் சுவையாக உண்டவரின் மனம் கொலைக்கருவியைக் கையில் கொண்டவரின் நெஞ்சம் போல் நன்மையாகி அருளைப் போற்றாது.



கத்தியைத் தன் கையில் பிடித்திருப்பவரின் மனம், இரக்கத்தை எண்ணிப் பாராதது போலப் பிறிதொரு உடலைச் சுவைத்து உண்டவரின் மனமும் இரக்கத்தை எணணாது.



படைக் கருவியைப் பயன்படுத்துவோர் நெஞ்சமும், ஓர் உயிரின் உடலைச் சுவைத்து உண்பவர் நெஞ்சமும், அருளுடைமையைப் போற்றக் கூடியவைகள் அல்ல


Like heart of them that murderous weapons bear, his mind,
Who eats of savoury meat, no joy in good can find.


Like the (murderous) mind of him who carries a weapon (in his hand), the mind of him who feasts with pleasure on the body of another (creature), has no regard for goodness.



padaikoNtaar nenjampoal nannookkaadhu ondran
udalsuvai uNdaar manam


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

உடல் வளர்கவே உணவு என்ற எண்ணம் தவறு அருளை வளப்பதே அவசியம். உணவின் மீது ஆர்வம் அதிகரித்தால் அருள் விலகும், பொருள்கள் மீது ஆர்வம் குறைந்தால் பொருள் விலகும். உணவின் சுவை படை கொண்டவர் மனநிலைப் போல் நன்மைகளை நாடாது. உயிரின் இயல்பை வளர்க்க உணவு அவசியமில்லை. உணவிற்கு விலை கொடுக்க மறுத்தால் உற்பத்தி செய்பவரும் இல்லாமல் போவர்கள். புலன் என்ற ஒருமையின் பன்மை சொல்லாகவும் புலால் இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது. கொல்லாதவரை புலன்கள் அடங்கி மறுக்கப்பட்டவரை எல்லா உயிரும் போற்றும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.