திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: புகழ் / Renown

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.



கொடுப்பது ஒத்திசைவுடன் வாழ்வது அதை விட சிறந்த ஊதியம் இல்லை உயிருக்கு



வறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும், அப் புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை.



ஏழைகளுக்குக் கொடுப்பது; அதனால் புகழ் பெருக வாழ்வது; இப்புகழ் அன்றி மனிதர்க்குப் பயன் வேறு ஒன்றும் இல்லை.



கொடைத் தன்மையும், குன்றாத புகழும்தவிர வாழ்க்கைக்கு ஆக்கம் தரக் கூடியது வேறெதுவும் இல்லை.


See that thy life the praise of generous gifts obtain;
Save this for living man exists no real gain.


Give to the poor and live with praise. There is no greater profit to man than that.



eedhal isaipada vaazhdhal adhuvalladhu
oodhiyam illai uyirkku


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

கொடுப்பதும் ஒத்திசைவு கொள்ளவதுமே ஒர் உயிரின் ஊதியம். கொடுக்கும் ஒருவரை புகழ்வதே சிறந்த பேச்சாக அமையும். தன் குற்றத்தை திருத்திக் கொள்ளாமல் அடுத்தவரை கடிந்துக் கொள்வது குற்றம். புகழோடு தோன்றுவதே சரியானது. குற்றமற்றவரே வாழ்பவர்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.