திருவள்ளுவரின் திருக்குறள்

பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல்.



பயன் அற்ற பேச்சை பாராட்டுபவனை குழந்தை என்பதா?. குழந்தை போன்ற பதர் என்பதா?



பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது, மக்களுள் பதர் என்று சொல்லவேண்டும்.



பயனற்ற சொற்களையே பலகாலமும் சொல்பவனை மனிதன் என வேண்டா; மனிதருள் பதர் என்றே சொல்லுங்கள்.



பயனற்றவைகளைச் சொல்லிப் பயன்பெற நினைப்பவனை, மனிதன் என்பதைவிட அவன் ஒரு பதர் என்பதே பொருத்தமானதாகும்.


Who makes display of idle words' inanity,
Call him not man, -chaff of humanity!.


Call not him a man who parades forth his empty words. Call him the chaff of men.



payanilsol paaraattu vaanai makan-enal
makkat padhati yenal


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

ஏளனத்திற்கு உரிமை கொண்டாடும் பயனற்றதை பேசுபவன் மக்கள் என்பதில்லை பதர் என்றே கொள்ளலாம், பயன் தராதவற்றை பெரியவர்கள் எப்பொழுதும் உரைப்பதில்லை. ஐயமற அறிந்தவர்கள் தேவையற்றதை சொல்லுவதில்லை.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.