திருவள்ளுவரின் திருக்குறள்

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்.



சீரும் சிறப்பும் விலகும் பயனற்ற நீர்த்து போனாவர்கள் இடத்தில் சொன்னால்.



பயனில்லாத சொற்களை நல்ல பண்பு உடையவர் சொல்லுவாரானால், அவனுடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும்.



இனிய குணத்தவர் பயனற்ற சொற்களைச் சொன்னால், அவர் பெருமையும், புகழும் அப்பொழுதே நீங்கிவிடும்.



நல்ல பண்புடையவர் பயனில்லாத சொற்களைக் கூறுவாரானால் அவருடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கி விடும்.


Gone are both fame and boasted excellence,
When men of worth speak of words devoid of sense.


If the good speak vain words their eminence and excellence will leave them.



seermai siRappotu neengum payanila
neermai yudaiyaar solin


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

ஏளனத்திற்கு உரிமை கொண்டாடும் பயனற்றதை பேசுபவன் மக்கள் என்பதில்லை பதர் என்றே கொள்ளலாம், பயன் தராதவற்றை பெரியவர்கள் எப்பொழுதும் உரைப்பதில்லை. ஐயமற அறிந்தவர்கள் தேவையற்றதை சொல்லுவதில்லை.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.