திருவள்ளுவரின் திருக்குறள்

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.



நான் பார்க்கும் நேரம் நிலத்தை பார்த்தவள் பார்க்காத நேரத்தில் என்னை பார்த்து மெல்ல சிரிக்கிறாள்.



யான் நோக்கும் போது அவள் நிலத்தை நோக்குவாள், யான் நோக்காத போது அவள் என்னை நோக்கி மெல்லத் தனக்குள் மகிழ்வாள்.



நான் அவளை பார்க்கும்போது தலைகுனிந்து நிலத்தைப் பார்ப்பாள், நான் பார்க்காதபோதோ என்னைப் பார்த்து மெல்ல தனக்குள்ளே சிரிப்பாள்.



நான் பார்க்கும்போது குனிந்து நிலத்தைப் பார்ப்பதும், நான் பார்க்காத போது என்னைப் பார்த்துத் தனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிவதும் என் மீது கொண்டுள்ள காதலை அறிவிக்கும் குறிப்பல்லவா?.


I look on her: her eyes are on the ground the while:
I look away: she looks on me with timid smile.


When I look, she looks down; when I do not, she looks and smiles gently.



yaannhoakkum kaalai nilannhoakkum noakkaakkaal
thaannhoakki mella nagum


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

நோய் உண்டாக்கவும் அதை தீர்க்கும் மருந்தாகவும் உள்ள இவளின் கண் மறைமுக நோக்கத்திற்கு சரிபாதியல்ல அதைவிட அதிகமானது. காதல் பயிர் வளக்கும் அவள் பார்வை நான் வானம் பார்க்கையில் என்மேலும் அவளை பார்க்கையில் மண் மேலும் இருக்கும். ஒரு கண் இமைத்து அவள் காதலை உணர்த்தினாள். அவளது சொல் உறவற்றதாக இருந்தாலும் என்னை விலகாமல் இருந்தது. விலகாத சொல்லும் விலகும் பார்வையும் புதிய குறிப்பாக இருந்தது. ஏதுமற்ற பொதுப்பார்வை காதலர் கண்ணுக்கு உண்டு. கண்ணும் கண்ணும் கலந்தால் வார்த்தைகள் பயன் அற்றுப் போகின்றது.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.