திருவள்ளுவரின் திருக்குறள்

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்.



பார்த்தாள் பார்த்து வணக்கமுடன் குனிந்தால் (இறைஞ்சினாள்) அச்செயல் காதல் பயிர் வளர பாய்ச்சிய நீர்.



என்னை நோக்கினாள், யான் கண்டதும் நோக்கித் தலைகுனிந்தால், அது அவள் வளர்க்கும் அன்பினுள் வார்க்கின்ற நீராகும்.



நான் பார்க்காதபோது, என்னைப் பார்த்தாள்; பார்த்து நாணத்தால் தலைகுனிந்தாள்; இந்த செயல் எங்களுக்குள் காதல் பயிர் வளர அவள் ஊற்றிய நீராகும்.



கடைக்கண்ணால் அவள் என்னைப் பார்த்த பார்வையில் நாணம் மிகுந்திருந்தது; அந்தச் செயல் அவள் என்மீது கொண்ட அன்புப் பயிருக்கு நீராக இருந்தது.


She looked, and looking drooped her head:
On springing shoot of love 'its water shed! .


She has looked (at men) and stooped (her head); and that (sign) waters as it were (the corn of) our love.



noakkinaaL noakki iRainjinaaL aqdhavaL
yaappinuL attiya neer


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

நோய் உண்டாக்கவும் அதை தீர்க்கும் மருந்தாகவும் உள்ள இவளின் கண் மறைமுக நோக்கத்திற்கு சரிபாதியல்ல அதைவிட அதிகமானது. காதல் பயிர் வளக்கும் அவள் பார்வை நான் வானம் பார்க்கையில் என்மேலும் அவளை பார்க்கையில் மண் மேலும் இருக்கும். ஒரு கண் இமைத்து அவள் காதலை உணர்த்தினாள். அவளது சொல் உறவற்றதாக இருந்தாலும் என்னை விலகாமல் இருந்தது. விலகாத சொல்லும் விலகும் பார்வையும் புதிய குறிப்பாக இருந்தது. ஏதுமற்ற பொதுப்பார்வை காதலர் கண்ணுக்கு உண்டு. கண்ணும் கண்ணும் கலந்தால் வார்த்தைகள் பயன் அற்றுப் போகின்றது.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.