திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: பெருமை / Greatness

சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக்கொள் வேமென்னும் நோக்கு



சிறுமைப்பட்ட மனிதர்களின் உணர்ச்சியில் இருக்காது பெருமைக்கு உரிய பெரியவர்களை போற்றி ஏற்கும் நோக்கம்.



பெரியாரை விரும்பிப் போற்றுவோம் எண்ணும் உயர்ந்த நோக்கம், அவருடைய சிறப்பை உணராத சிறியோரின் உணர்ச்சியில் இல்லை.



பெருமைக்கு உரியவர்களைப் பின்பற்றி அவர் மரபைக் காப்போம் என்னும் நல்லெண்ணம் சிறியவர் மனத்துள் இராது.



பெரியோரைப் போற்றி ஏற்றுக்கொள்ளும் நோக்கம், அறிவிற் சிறியோரின் உணர்ச்சியில் ஒன்றியிருப்பதில்லை.


'As votaries of the truly great we will ourselves enroll,'
Is thought that enters not the mind of men of little soul.


It is never in the nature of the base to seek the society of the great and partake of their nature.



siRiyaar uNarchchiyul illai periyaaraip
paeNikkoL vaemennum noakku


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

எண்ணமற்ற வெறுமையுடன் இருப்பதே மனிதனுக்கு பெருமை. உயிர்களிடத்தில் இருக்கும் வேறுபட்ட செயல்பாடுகளே பெருமை. மேலாக செயல்பட வாய்ப்பு இருந்தும் அப்படி இல்லாதவர் கீழானவரே. தன்னை தானே கேட்டு நடப்பவரே கற்புடை பெண் போன்றவர், தேவையற்றதை மறைத்து ஆற்றக்கூடியதை ஆற்றி பெருமிதம் இல்லாமல் பணிவுடன் இருப்பதே பெருமை.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.