திருவள்ளுவரின் திருக்குறள்

முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.



முகத்திற்கு நேராக அமர்ந்து இனிமையாக பார்த்து உள்ளத்திலிருந்து இனிய வார்த்தைகளை தருவதே அறம்.



முகத்தால் விரும்பி- இனிமையுடன் நோக்கி- உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும்.



பிறரைப் பார்க்கும்போது முகத்தால் விரும்பி, இனிமையாகப் பார்த்து, உள்ளத்துள் இருந்து வரும் இனிய சொற்களைச் சொல்வதே அறம் ஆகும்.



முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதே அறவழியில் அமைந்த பண்பாகும்.


With brightly beaming smile, and kindly light of loving eye,
And heart sincere, to utter pleasant words is charity


Sweet speech, flowing from the heart (uttered) with a cheerful countenance and a sweet look, is true virtue



mukaththaan amarndhu inidhu-noakki akaththaanaam
insoa linadhae aRam


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

செம்பொருள் கண்டவர் வார்த்தைகள் கண்கள் ஈரம் வழிய செய்யும், உள்ளத்தை பொருத்தே கொடுக்கும் அளவு இருக்கும் முக மலர்ச்சி பொருத்தே வார்த்தை பொருள்படும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.