திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: உட்பகை / Enmity within

உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று.



முழு சம்மதம் இல்லாதவர் வாழ்க்கை இருண்ட குகைக்குள் கொடிய பாம்புடன் இருப்பதைப் போன்றது.



அகத்தில் உடண்பாடு இல்லாதவருடன் குடிவாழும் வாழ்க்கை, ஒரு குடிசையிற் பாம்போடு உடன்வாழ்ந்தாற் போன்றது.



மனப்பொருத்தம் இல்லா‌தவரோடு சேர்ந்து வாழும் வாழ்க்கை, ஒரு குடிசைக்குள்ளே பாம்புடன் சேர்ந்து வாழ்வது போலாகும்.



உள்ளத்தால் ஒன்றுபடாதவர்கள் கூடிவாழ்வது என்பது ஒரு சிறிய குடிலுக்குள் பாம்புடன் இருப்பது போன்று ஒவ்வொரு நொடியும் அச்சம் தருவதாகும்.


Domestic life with those who don't agree,
Is dwelling in a shed with snake for company.


Living with those who do not agree (with one) is like dwelling with a cobra (in the same) hut.



utampaatu ilaadhavar vaazhkkai kutangaruL
paampoatu utanuRainh thatru


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

இன்பம் தராத உறவுகளும் உண்டு அவர்கள் வாள் கொண்டு அழிக்கும் பகைவரை விட கொடுமையானவர்கள். உட்பகை உள்ளவருடன் வாழ்தல் சுடாத பானையில் உலை வைத்தல் போன்றது. உள்ளத்தின் இயல்பை அழிக்கும் உட்பகை குடுப்பத்திற்கு கேடு. உட்பகை கொண்டவருடன் வாழ்வதும் கொடிய பாம்புடன் இருட்டில் இருப்பதும் ஒன்றே.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.