திருவள்ளுவரின் திருக்குறள்

வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு.



எப்படி என்ற வகை அறிந்து, தகுதிகளை அறிந்து, தன்னை காக்க அறிந்தால், அழியும் பகைவருக்கு ஏற்பட்ட கர்வம்.



செய்யும் வகையை அறிந்து தன்னை வலிமைப்படுத்திக் கொண்டு தற்காப்புத் தேடிக் கொண்டால், பகைவரிடத்தில் ஏற்பட்ட செருக்குத் தானாவே அழியும்.



ஒரு செ‌யலைச் செய்ய வேண்டிய முறையை அறிந்து, நம்மைப் பலப்படுத்துவதுடன் ரகசியங்களையும் நாம் காத்துக் கொண்டால், பகைவர் தங்கள் மனத்துள் நம்மை எதிர்க்க எண்ணிய ‌செருக்கு அழியும்.



வழிவகை உணர்ந்து, தன்னையும் வலிமைப்படுத்திக் கொண்டு, தற்காப்பும் தேடிக் கொண்டவரின் முன்னால் பகையின் ஆணவம் தானாகவே ஒடுங்கி விடும்.


Know thou the way, then do thy part, thyself defend;
Thus shall the pride of those that hate thee have an end.


The joy of one's foes will be destroyed if one guards oneself by knowing the way (of acting) and securing assistance.



vakaiyaRindhu thaRseydhu thaRkaappa maayum
pakaivarkaN patta serukku


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

பண்பற்ற பகை விரும்ப வேண்டாம். கொலைக் கருவி கொண்டவனின் பகைவிட சொல் கொண்டவன் பகை வலிமையானது. எல்லாரையும் பகைத்துக் கொள்பவனே ஏழை. பகைவரை நட்பாக கருதும் பண்பே முதன்மையானது. தெளிவற்றவன் நட்பு நல்லதல்ல. தன்னை காத்துக் கொள்ளவதும் பகையுணர்வை வளரவிடாமல் அழிப்பதும் அவசியமானது. குற்றம் செய்பவரின் செறுக்கை அழிக்காதவர் உண்மையாக வாழ்பவர் இல்லை.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.