திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: புல்லறிவாண்மை / Ignorance

கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும்.



கல்லாமலேயே ஒன்றை நடைமுறை செய்வதால், குற்றம் இல்லாமல் கற்றதையும் ஐயப்படச் செய்துவிடும்.



அறிவில்லாதவர் தாம் கற்காத நூல்களை கற்றவர் போல் மேற்கொண்டு நடத்தல், அவர் குற்றமறக் கற்றுவல்ல பொருளைப் பற்றியும் மற்றவர்க்கு ஐயம் உண்டாகும்.



அறிவற்றவர், தாம் படிக்காத நூல்களையும் படித்தவர் போலப் பேசிச்செயற்படுவது, அவர் உணமையிலேயே நன்கு அறிந்த நூல்களின் மேலும் சந்தேகத்தைப் பிறர்க்கு உண்டாக்கும்.



அறிந்து கொள்ளாதவைகளையும் அறிந்தவர் போல ஒருவர் போலித்தனமாகக் காட்டிக் கொள்ளும் போது, அவர் ஏற்கனவே எந்தத் துறையில் திறமையுடையவராக இருக்கிறாரோ அதைப் பற்றிய சந்தேகமும் மற்றவர்களுக்கு உருவாகும்.


If men what they have never learned assume to know,
Upon their real learning's power a doubt 'twill throw.


Fools pretending to know what has not been read (by them) will rouse suspicion even as to what they have thoroughly mastered.



kallaadha maeRkoN tozhukal kasadaRa
valladhooum aiyam tharum


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

அறிவற்ற தன்மையே இல்லாமை எனப்படும். அறிவற்றவரும் கொடுக்கும் தன்மை பெறுபவரின் தவத்தன்மையே. அறிவற்றவரே தன்னை நுட்ப அறிவு உள்ளவராக எண்ணுவார். தவறால் ஆன குறையை மறைப்பதே பெரிய குறை. கிழ்படிதல் மற்றும் சுய சிந்தனை இல்லாதவர் உயிர் அவருக்கான நோய். உணராதவன் உளரல் அவனது அறியாமையை காட்டும். உள்ளதை இல்லை என்பவன் பேய்க்கு ஒப்பானவன்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.