திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: பேதைமை / Folly

நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்.



வெட்கப்படாமை, வேட்கையோடு தேடாமை, இனிமையாக இல்லாமை, எந்த ஒன்றையும் பாதுகாக்காமை, போன்றவைகள் பேதையின் தொழிலாகும்.



தகாதவற்றிற்கு நாணாமலிருத்தல், தக்கவற்றை நாடாமலிருத்தல், அன்பு இல்லாமை, நன்மை ஒன்றையும் விரும்பாமை ஆகியவை பேதையின் தொழில்கள்.



தீமைக்கு வெட்கப்படாதிருப்பது, விரும்ப வேண்டியவற்றை விரும்பாதிருப்பது, எவரிடத்தும் அன்பு இல்லாதிருப்பது, காக்க வேண்டிய எதையும் காவாதிருப்பது ஆகியவை அறிவற்றவரின் செயல்கள் ஆகும்.



வெட்கப்பட வேண்டியதற்கு வெட்கப்படாமலும், தேடவேண்டியதைத் தேடிப் பெறாமலும், அன்புகாட்ட வேண்டியவரிடத்தில் அன்பு காட்டாமலும், பேணிப் பாதுகாக்கப்பட வேண்டியவற்றைப் பாதுகாக்காமலும் இருப்பது பேதைகளின் இயல்பாகும்.


Ashamed of nothing, searching nothing out, of loveless heart,
Nought cherishing, 'tis thus the fool will play his part.


Shamelessness indifference (to what must be sought after), harshness, and aversion for everything (that ought to be desired) are the qualities of the fool.



naaNaamai naadaamai naarinmai yaadhondrum
paeNaamai paedhai thozhil


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

அடைய வேண்டியதை அலட்சியத்தால் தவறவிடுவது பேதைமை. தனக்கு பொருந்தாததை செய்வதே பேதைமையில் முதன்மை. வெட்கப்படுதல், வேட்கையுடன் தேடல், இனிமையாக இருத்தல், பாதுகாத்தல் என இப்பண்புகள் இல்லாததே பேதைமை. பேதைகளின் பிரிவு துன்பம் தராது. கழுவாத கால்களுடன் படுக்க போவதைப் போன்றது அறிஞர் கூட்டத்திற்கு பேதை போவது.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.