திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: பேதைமை / Folly

பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல்.



மடமை என்பது என்ன என்றால் சிறு துன்பத்துக்கு அஞ்சி நற்பயனை நழுவ விடுவது.



பேதைமை என்று சொல்லப்படுவது யாது என்றால், தனக்கு கெடுதியானதைக் கைக் கொண்டு ஊதியமானதை கைவிடுதலாகும்.



அறியாமை என்பது என்ன என்றால், அது ஒருவன் தனக்குத் தீமை தருவதை ஏற்றுக் கொண்டு, இலாபத்தை விட்டு விடுவதே ஆம்.



கேடு விளைவிப்பது எது? நன்மை தருவது எது? என்று தெளிவடையாமல் நன்மையை விடுத்துத் தீமையை நாடுவதே பேதைமை என்பதற்கான எடுத்துக்காட்டாகும்.


Familiarity What one thing merits folly's special name.
Letting gain go, loss for one's own to claim!.


Folly is one (of the chief defects); it is that which (makes one) incur loss and forego gain.



paedhaimai enpadhondru yaadhenin EdhangoNdu
oodhiyam poaka vidal


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

அடைய வேண்டியதை அலட்சியத்தால் தவறவிடுவது பேதைமை. தனக்கு பொருந்தாததை செய்வதே பேதைமையில் முதன்மை. வெட்கப்படுதல், வேட்கையுடன் தேடல், இனிமையாக இருத்தல், பாதுகாத்தல் என இப்பண்புகள் இல்லாததே பேதைமை. பேதைகளின் பிரிவு துன்பம் தராது. கழுவாத கால்களுடன் படுக்க போவதைப் போன்றது அறிஞர் கூட்டத்திற்கு பேதை போவது.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.