திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: பழைமை / Familiarity

கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு.



கெடுதல் நினையாது தொடரும் நட்பை கைக்கொண்டவர் நட்பை கைவிடாமல் இருக்கவே நினைக்கும் உலகு.



உரிமை கெடாமல் தொன்று தொட்டு வந்த உறவு உடையவரின் தொடர்பைக் கைவிடாதவரை உலகம் விரும்பிப் போற்றும்.



உரிமையை விடாது நெடுங்காலமாக வரும் நட்பினை உடையவர் கேடு செய்தாலும் அந்த நட்பை விட்டு விடாதவரை, அவரது நட்புள்ளம் குறித்து உலகம் விரும்பும்.



தொன்றுதொட்டு உரிமையுடன் பழகிய நட்புறவைக் கைவிடாமல் இருப்பவரை உலகம் போற்றும்.


Friendship of old and faithful friends,
Who ne'er forsake, the world commends.


They will be loved by the world, who have not forsaken the friendship of those with whom they have kept up an unbroken long-standing intimacy.



ketaaa vazhivandha kaeNmaiyaar kaeNmai
vidaaar vizhaiyum ulagu


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

நாட்களைப் போல் மாறாமல் நிலையாக இருப்பதே பழைமை. உரிமையும் உடன்பாடும் பழைமையால் வரும். துறவியும் பழைமை பாராட்டும் நட்பை துறக்கமாட்டார்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.