திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: நட்பு / Friendship

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.



நட்பு பாரட்டுவதுப் போல் செய்வதற்கு அரிய செயல் இல்லை. அதுபோலவே, செயல்படுவதற்கும் பாதுகாப்பானது இல்லை.



நட்பைப்போல் செய்து கொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன, அதுபோல் தொழிலுக்கு அரிய காவலாக இருப்பவை எவை உள்ளன.



சம்பாதிப்பதற்கு நட்பைப் போல அரிய பொருள் வேறு எவை உண்டு? அதைச் சம்பாதித்து விட்டால் பிறர் புக முடியாதபடி நம்மைக் காப்பதற்கு அரிய பொருள் வேறு எவை உண்டு?.



நட்புக் கொள்வது போன்ற அரிய செயல் இல்லை. அதுபோல் பாதுகாப்புக்கு ஏற்ற செயலும் வேறொன்றில்லை.


What so hard for men to gain as friendship true?
What so sure defence 'gainst all that foe can do?.


What things are there so difficult to acquire as friendship ? What guards are there so difficult to break through by the efforts (of one's foes) ? .



seyaRkariya yaavuLa natpin adhupoal
vinaikkariya yaavuLa kaappu


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

செயல்களில் அரியது நட்புடன் இருப்பது. நிறைவானவர் நட்பு வளர்மதியாக வளர்ந்து நிறைவற்றவர் நட்பு தேய்ந்துவிடும். படிக்க இனிமையான புத்தகம் போன்றது இனிமையானவர் நட்பு. கூடி மகிழமட்டும் இல்லாமல் குறைகளை எடுத்துக் காட்டி திருத்தவும் நட்பு அவசியம். உதவி கேட்காமலேயே தானாக முன்வந்து செயல்படும் நட்பே நட்பிற்கு இலக்கணம். தன்னை உயர்வாக காட்டும் நட்பு நிலைக்காது.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.