திருவள்ளுவரின் திருக்குறள்

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்.



கவனிக்கப்படாதவரை கவனிக்கச் செய்யும் பொருள் போன்றது இல்லை பொருள்.



ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும், மதிப்புடையவராகச் செய்வதாகிய பொருள் அல்லாமல் சிறப்புடைய பொருள் வேறு இல்லை.



தகுதி அற்றவரையும்கூடத் தகுதி உடையவராக ஆக்கிவிடும் தகுதி உடையது, பணமே அன்றி வேறொன்றும் இல்லை.



மதிக்கத் தகாதவர்களையும் மதிக்கக்கூடிய அளவுக்கு உயர்த்திவிடுவது அவர்களிடம் குவிந்துள்ள பணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை.


Nothing exists save wealth, that can
Change man of nought to worthy man.


Besides wealth there is nothing that can change people of no importance into those of (some) importance.



poruLal lavaraip poruLaakach cheyyum
poruLalladhu illai poruL


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

ஒன்றுமற்ற ஒருவரை மதிக்கச் செய்யும் பொருளே பொருள் இது இல்லை என்றால் யாரும் மதிப்பது இல்லை. இருள் அகற்றும் பொருள் இன்பமும் அறமும் திறமும் வளர்க்கும். அருள் என்ற அன்பின் குழைந்தையை பொருளே வளர்க்கும். குன்றின் மேல் நின்று யானையின் சண்டையை காண்பதைப் போல் தனக்கு பாதகமின்றி பொருளை அடைந்தால் அறமும் இன்பமும் இசைந்து இருக்கும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.