திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: அரண் / The Fortification

கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்கெளிதாம் நீரது அரண்.



நீரால் செய்யப்பட்டாலும் அந்நீரை எளிதாக எற்காத கூழ் போல் தனது அகத்தே இருப்பவருக்கு எளிதாக இருப்பதே அரண்.



பகைவரால் கைப்பற்ற முடியாததாய், தன்னிடம் உணவுபொருள் கொண்டதாய், உள்ளிருப்போர் நிலைத்திருப்பதர்க்கு எளிதாகிய தன்மை உடையது அரண்.



பலநாள் முற்றுகையிட்டாலும் பகைவரால் கைப்பற்ற முடியாதது ஆகி, உள்ளிருப்பார்க்கு வேண்டிய உணவையும் உடையதாய் உள்ளிருப்போர் போரிட வாய்ப்பாகவும் இருப்பதே அரண்.



முற்றுகையிட்டுக் கைப்பற்ற முடியாமல், உள்ளேயிருக்கும் படையினர்க்கும் மக்களுக்கும் வேண்டிய உணவுடன், எதிரிகளுடன் போர் புரிவதற்கு எளிதானதாக அமைக்கப்பட்டுள்ளதே அரண் ஆகும்.


Impregnable, containing ample stores of food,
A fort for those within, must be a warlike station good.


A fort is that which cannot be captured, which abounds in suitable provisions, and affords a position of easy defence to its inmates.



koLaRkaridhaaik koNtakoozhth thaaki akaththaar
nilaikkeLidhaam neeradhu araN


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

ஆள்பவருக்கும் அஞ்சுபவருக்கும் அவசியமான அரண். நன்நீரும் வளமான மண்ணும் நிழல்நிறை காடும் மலையும் அடக்கியதாக இருக்கும். பகைவரை தடுக்கவும் உள்ளவரை பாதுகாக்கவும் வல்லமை கொண்டதாக இருக்கவேண்டும். எவ்வளவு சிறப்பு பெற்ற அரணாக இருப்பினும் செயல்திறன் அற்ற ஆட்சியாளர் அமைந்தால் அரண் பயனற்றதாகிவிடும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.