திருவள்ளுவரின் திருக்குறள்

கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொல்தெரிதல் வல்லார் அகத்து.



கற்று அறிந்தவர் இடத்தில் கல்வி வெளிப்படுவதைப் போலவே, அழுக்கற்ற வார்த்தைகள் அறிந்தால் பேசும் வல்லமை உள்ளே தோன்றும்.



குற்றமறச்சொற்களை ஆராயவதில் வ ல்ல அறிஞர்களிடத்தில் பல நூல்களைக் கற்றறிந்தவரின் கல்வியானது நன்றாக விளங்கித் தொன்றும்.



சொற்களைப் பிழை இல்லாமல் பொருள் அறியும் ஆற்றல் படைத்தவர் கூடிய அவையில் பேசும்போது, பலவகை நூல்களையும் கற்று, அவற்றின் சிறப்பை அறிந்த பேச்சாளரின் கல்வித்திறம் அனைவருக்கும் விளங்கும்.



மாசற்ற சொற்களைத் தேர்ந்தெடுத்து உரை நிகழ்த்துவோரிடமே அவர் கற்றுத் தேர்ந்த கல்வியின் பெருமை விளங்கும்.


The learning of the learned sage shines bright
To those whose faultless skill can value it aright.


The learning of those who have read and understood (much) will shine in the assembly of those who faultlessly examine (the nature of) words.



katraRindhaar kalvi viLangum kasatarach
choldheridhal vallaar agaththu


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

அளவை அறிந்து பேச வேண்டும், ஆர்வம் குறையாமல் அறிபவர் தரம் புரிந்து பேச ஒத்த உணர்வு பெற்று பயிர் வளர்க்க உதவும் நீராய் மாறும். ஆனால், தகுதியற்றவர் முன் பேசினால் சாக்கடையில் கொட்டிய அமிழ்தாகும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.