திருவள்ளுவரின் திருக்குறள்

அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉம் இல்.



கூடி இருப்பவர்கள் நோக்கம் அறியமுடியதவர் சொல்ல முற்படுவர் என்றால் அந்த சொல்லில் வகையும், வல்லமையும் இருக்காது.



அவையின் தன்மை அறியாமல் சொல்லுதலை மேற்கொள்கின்றவர், சொற்களின் வகை அறியாதவரே, அவர் சொல்லவல்லதும் இல்லை.



தம் பேச்சைக் கேட்கும் சபையின் இயல்பை அறியாமல் தொடர்ந்து பேசத் தொடங்குபவர், சொற்களின் கூறம் தெரியாதவர்; சொல்லும் திறமும் இல்லாதவர்.



அவையின் தன்மை அறியாமல் சொற்களைப் பயன்படுத்துகிறவர்களுக்கு அந்தச் சொற்களின் வகையும் தெரியாது; பேசும் திறமையும் கிடையாது.


Unversed in councils, who essays to speak.
Knows not the way of suasive words,- and all is weak.


Those who undertake to speak without knowing the (nature of the) court are ignorant of the quality of words as well as devoid of the power (of learning).



avaiyaRiyaar sollalmaeR koLpavar sollin
vakaiyaRiyaar valladhooum il


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

அளவை அறிந்து பேச வேண்டும், ஆர்வம் குறையாமல் அறிபவர் தரம் புரிந்து பேச ஒத்த உணர்வு பெற்று பயிர் வளர்க்க உதவும் நீராய் மாறும். ஆனால், தகுதியற்றவர் முன் பேசினால் சாக்கடையில் கொட்டிய அமிழ்தாகும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.