திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: தூது / The Envoy

கடனறிந்து காலங் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை.



ஆற்றவேண்டிய கடமை அறிந்து, தகுந்த காலத்தை கருத்தில் கொண்டு, இடத்தை அறிந்து, சிந்தித்து எடுத்துரைப்பதே தூதின் தலைமையானது.



தன் கடமை இன்னதென்று தெளிவாக அறிந்து , அதை செய்வதற்கு ஏற்றக்காலத்தை எதிர்நோக்கி தக்க இடத்தையும் ஆராய்ந்து சொல்கின்றவனே தூதன்.



தம் நாட்டிற்காக அடுத்த அரசிடம் தாம் ஆற்றவேண்டிய கடமையை அறிந்து, சொல்ல வேண்டியதை முன்னதாகவே மனத்துள் திட்டமிட்டு, ஏற்ற நேரம் பார்த்துக் கடமையைச் செய்வதற்குப் பொருத்தமான இடத்தையும் கண்டு சொல்பவனே தூதருள் தலைமையானவன்.



ஆற்றவேண்டிய கடமையை அறிந்து, அதற்குரிய காலத்தையும் இடத்தையும் தேர்ந்து, சொல்ல வேண்டியதைத் தெளிவாகச் சிந்தித்துச் சொல்பவனே சிறந்த தூதனாவான்.


He is the best who knows what's due, the time considered well,
The place selects, then ponders long ere he his errand tell.


He is chief (among ambassadors) who understands the proper decorum (before foreign princes), seeks the (proper) occasion, knows the (most suitable) place, and delivers his message after (due) consideration.



katanaRindhu kaalanG karudhi idanaRindhu
eNNi uraippaan thalai


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

அன்பு நற்குடி மன்னரை மதித்தல் என உள்ளவரே தூதிற்கு சரியானவர். தொகுத்து தேவையானதை மட்டும் தெளிவாக நூல் எழத வல்லவர் போலும் சிறந்த வேல் வீச்சு போலும் தூது இருக்க வேண்டும். மரணம் வரும் என்றாலும் அஞ்சாமல் மன்னவனுக்கு உண்மை உரைக்கவேண்டும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.