திருவள்ளுவரின் திருக்குறள்

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.



செயல்விளக்கம் பேசுதல் எல்லாருக்கும் எளிமையானது. அரியது விளக்கியபடி செயல்படுதல்.



இச் செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளியனவாம், சொல்லிய படி செய்து முடித்தல் அரியனவாம்.



நான் இந்தச் செயலை இப்படிச் செய்யப் போகிறேன் என்று சொல்லுவது எல்லார்க்கும் சுலபம்; சொல்லியபடியே அதைச் செய்து முடிப்பதுதான் கடினம்.



சொல்லுவது எல்லோருக்கும் எளிது; சொல்லியதைச் செய்து முடிப்பதுதான் கடினம்.


Easy to every man the speech that shows the way;
Hard thing to shape one's life by words they say!.


To say (how an act is to be performed) is (indeed) easy for any one; but far difficult it is to do according to what has been said.



solludhal yaarkkum eLiya ariyavaam
solliya vaNNam seyal


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

செயல்பட உறுதியாக இருக்க மனம் உறுதியாக இருக்க வேண்டும். சொன்னபடி செய்யவும், எண்ணியதை அடையவும் மன உறுதியே முதன்மையானது. உருவம் ஒரு பொருட்டல்ல அச்சாணியைப் போல் அவர்கள் இருக்கக்கூடும். செயல் துன்பம் தந்தாலும் பலன் இன்பம் என்றால் செயல்பட தயங்காது இருப்பவரையே உலகம் போற்றும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.