திருவள்ளுவரின் திருக்குறள்

இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்.



இன்பமான சுழலில் இன்பத்தின் மேல் அக்கறை இல்லாதவர் துன்பமான சுழலில் துன்பம் அடைவது இல்லை.



இன்பம் வந்திக் காலத்தில் அந்த இன்பத்தை விரும்பிப் போற்றாதவன் துன்பம் வந்த காலத்தில் அந்தத் துன்பத்தை அடைவது இல்லை.



தன் உடலுக்கு இன்பம் வரும்போது அதை மனத்தால் விரும்பாதவன், துன்பம் வரும்போது மனம் தளர்ந்து துன்பப்படமாட்டான்.



இன்பம் வரும் பொழுது அதற்காக ஆட்டம் போடாதவர்கள், துன்பம் வரும் பொழுதும் அதற்காக வாட்டம் கொள்ள மாட்டார்கள். இரண்டையும் ஒன்றுபோல் கருதும் உறுதிக்கு இது எடுத்துக்காட்டு.


Mid joys he yields not heart to joys' control.
Mid sorrows, sorrow cannot touch his soul.


He does not suffer sorrow, in sorrow who does not look for pleasure in pleasure.



inpaththuL inpam vizhaiyaadhaan thunpaththuL
thunpam uRudhal ilan


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

இடர் கண்டு அழியாமல் இருக்க நகைப்புன் அதைப்பார்த்து உள்ளத்தின் திறத்தை வளர்த்து இடர்பாட்டிற்கே இடர்பாடு தரவேண்டும். இடர்பாடுகள் நம்மை வளர்க்கும் அற்புத சுழல் என உணர்ந்தவர் இன்பத்தில் நிலைக்கிறார். இன்பம் கருதி செயல்படமால் இடர்பாடுகளும் இன்பத்திற்கே என்பதே சிறப்பு.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.