திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: பொச்சாவாமை / Unforgetfulness

இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுவொப்பது இல்.



நினைவை இழக்காமை யார் இடத்தில் என்றும் வழுக்காமல் இருக்கிறதோ அதற்க்கு ஒப்பானது இல்லை.



யாரிடத்திலும் எக்காலத்திலும் மறந்தும் சோர்ந்திருக்காதத் தன்மை தவறாமல் பொருந்தியிருக்குமானால், அதற்கு ஒப்பான நன்மை வேறொன்றும் இல்லை.



எவரிடத்திலேனும் எப்போதும் விடாமல் மறதி இல்லாத குணம் மட்டும் இருக்கும் என்றால், அதைப் போன்ற நன்மை வேறு இல்லை.



ஒருவரிடம், மறவாமை என்னும் பண்பு தவறாமல் பொருந்தியிருக்குமேயானால், அதைவிட அவருக்கு நன்மை தரக்கூடியது வேறு எதுவும் இருக்க முடியாது.


Towards all unswerving, ever watchfulness of soul retain,
Where this is found there is no greater gain.


There is nothing comparable with the possession of unfailing thoughtfulness at all times; and towards all persons.



izhukkaamai yaarmaattum endrum vazhukkaamai
vaayin adhuvoppadhu il


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

வெற்றியின் பெருமிதம் தரும் மறதி கோபத்தின் விளைவைவிட மோசமானதாக இருக்கும். மறதியற்ற தன்மையே அரன் போல் நம்மை காக்கும். இகழ்ந்து பேசி கேட்டவர்கள் உண்டு என்பதை மறக்க வேண்டாம். நினைத்தபடி அடைவது எளிது நினைத்தபடியை நினைவு கூறும் ஆற்றல் இருந்தால்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.