திருவள்ளுவரின் திருக்குறள்

அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி.



இல்லாதவரை வளர்க்க விரும்பவேண்டும் மற்றவர்கள் பற்று இல்லாமல் பழிக்கு அஞ்சாதவர்கள்.



சுற்றத்தாறின் தெடர்பு அற்றவரை நம்பித் தெளியக்கூடாது, அவர் உலகத்தில் பற்று இல்லாதவராகையால் பழிக்கு நாண மாட்டார்.



உறவு பலம் இல்லாதவரைப் பதவிகளுக்குத் தெரிவு செய்வதைத் தவிர்க்கவும் ஏன் எனில், அவர்களுக்குப் பந்த பாசம் இல்லை. பழிக்கு வெட்கப்படவுமாட்டார்.



நெறியற்றவர்களை ஒரு பணிக்குத் தேர்வு செய்வது கூடாது. அவர்கள் உலகத்தைப் பற்றிக் கவலைப்படாமல், பழிக்கு நாணாமல் செயல்படுவார்கள்.


Beware of trusting men who have no kith of kin;
No bonds restrain such men, no shame deters from sin.


Let (a king) avoid choosing men who have no relations; such men have no attachment, and therefore have no fear of crime.



atraaraith thaeRudhal Ompuka matravar
patrilar naaNaar pazhi


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

அகம் சார்ந்த அறமும், புறம் சார்ந்த பொருளும், நிலையான இன்பமும். உயரின் தன்மையும் அச்சமும் என நானகையும் தெரிந்து தேறுவதையே தெளிவு எனலாம். நல்ல சுழலில் பிறந்தாலும் குற்றம் அற்றவனாக வாழ்வதே தெளிவு. அரியன கற்பதைக் காட்டிலும் தன் குற்றத்தை நீக்குவதை தெளிவு. குணம் குற்றம் சீர்தூக்கிப் பார்த்து மிகையானதை எடுத்துக் கொள்ள வேண்டும். தேராதவரின் பின் சென்றால் தாராத துன்பம் விளையும். தேறியவரின் ஐயமும் தேராதவரின் தெளிவும் தீராத துன்பம் தரும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.