திருவள்ளுவரின் திருக்குறள்

ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்.



செய்ய முடிந்ததை அறிந்து அதன்படி செயல்படுபவருக்கு சாதிக்க முடியாதது இல்லை.



தனக்குப் பொருந்தும் செயலையும் அதற்காக அறிய வேண்டியதையும் அறிந்து அதனிடம் நிலைத்து முயல்கின்றவர்க்கு முடியாதது ஒன்றும் இல்லை.



தம்மால் செய்யமுடியும் செயலையும் அதைச் செய்வதற்கு ஏற்ற ஆற்றலையும் அறிந்து அதையே மனத்துள் சிந்தித்துச் செயலாற்றுவார்க்கு, முடியாதது ஒன்றும் இல்லை.



ஒரு செயலில் ஈ.டுபடும்போது அச்செயலைப் பற்றிய அனைத்தையும் ஆராய்ந்தறிந்து முயற்சி மேற்கொண்டால் முடியாதது எதுவுமில்லை.


Who know what can be wrought, with knowledge of the means, on this,
Their mind firm set, go forth, nought goes with them amiss.


There is nothing which may not be accomplished by those who, before they attack (an enemy), make themselves acquainted with their own ability, and with whatever else is (needful) to be known, and apply themselves wholly to their object.



olva thaRivadhu aRindhadhan kaNdhangich
selvaarkkuch sellaadhadhu il


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

செயலின் வலிமை சுயம் மற்றும் துணையானவர்களின் வலிமை எதிரியின் வலிமை அறிந்து எது வேண்டாதது அதை விலக்கி செயல்பட சாதிக்க முடியாதது இல்லை. இளகுவானதாக இருப்பினும் அளவில் அதிகமான பாரம் கூடும். எனவை அளவறிந்து வாழ வேண்டும். வரவு குறைந்ததாக இருப்பினும் செலவு மிகாமல் இருக்க வேண்டும். தன்னிடம் உள்ளதைக் அறிந்து வாழ வேண்டும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.