திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: இல்வாழ்க்கை / Domestic Life

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.



பழித்துவிடதாவாறு பக்குவமாக உண்ணுவது புரிந்து விட்டால் வாழ்க்கையின் பாதையில் இடையுறு இல்லை.



பொருள் சேர்க்கும் பொது பழிக்கு அஞ்சிச் சேர்த்து, செலவு செய்யும் போது பகுந்து உண்பதை மேற்க்கொண்டால், அவ்வாழ்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை.



பொருள் தேடும்போது பாவத்திற்குப் பயந்து தேடிய பொருளை உறவோடு பகிர்ந்து உண்ணும் இல்வாழ்பவனின் பரம்பரை ஒருகாலும் அழிவதில்லை.



பழிக்கு அஞ்சாமல் சேர்த்த பொருள் கணக்கின்றி இருப்பினும் அதைவிட, பழிக்கு அஞ்சிச் சேர்த்த பொருளைப் பகுத்து உண்ணும் பண்பிலேதான் வாழ்க்கையின் ஒழுக்கமே இருக்கிறது.


Who shares his meal with other, while all guilt he shuns,
His virtuous line unbroken though the ages runs


His descendants shall never fail who, living in the domestic state, fears vice (in the acquisition of property) and shares his food (with others)



pazhiyanjip paaththooN udaiththaayin vaazhkkai
vazhiyenjal enhjGnaandrum il


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

உள்ளபடி இருத்தல் என்ற தன்மையே இல்வாழ்வு. இதன் பெருட்டு அடையும் நன்மைகள் அதிகம். துறவு மெற்கொண்டவர், வாழ்பவர், இறந்தவர் என்ற மூவருக்கும் உதவும் ஆற்றலும், விருந்தேம்பலும், பழிக்கு அஞ்சுவதும் இல் வாழ்வின் சிறப்பு கூறுகள். எனவே, அன்புடனும், அறனுடனும் நடப்பதே பண்பும், பயனுள்ளதும் ஆகும். குடுப்பத்திலிந்து கற்க முடியதவர் துறப்பதால் எதையும் கற்க முடியாது. இல்வாழ்வு போன்ற சிறந்த நோன்பு இல்லை. பிறர் பழிக்காதபடி வாழ்வாங்கு வாழ்ந்தால் தெய்வமாகலாம்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.