திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: கேள்வி / Hearing

செவுக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.



கேட்பது குறையும் பொழுது வயிற்றுக்கு உணவு சிறிதாவது கொடுக்கப்பட வேண்டும் . (பசிஎடுப்பதால் காதடைக்கும்)



செவிக்கு கேள்வியாகிய உணவு இல்லாத போது (அதற்க்கு துணையாக உடலை ஒப்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்.



செவிக்கு உணவாகிய கேள்வி கிடைக்காதபோது, வயிற்றுக்கும் சிறிது உணவு இடப்படும்.



செவி வழியாக இன்பம் தரும் உணவு இல்லாதபோதே சிறிதளவு உணவு வயிற்றுக்குத் தரும் நிலை ஏற்படும்.


When 'tis no longer time the listening ear to feed
With trifling dole of food supply the body's need.


When there is no food for the ear, give a little also to the stomach.



sevikkuNa villaadha poazhdhu siRidhu
vayitrukkum eeyap padum


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

உயர் ஞானம் எனப்படும் நாத அனுபவத்தை செவி தருவதால் அச் செல்வம் செல்வத்திற்கெல்லாம் முதன்மையானது. நாத ஒலி குறைந்தால் வயிற்றுக்கு உணவு தர வேண்டும். செவியின் சுவை உணர்ந்தவரே ஆன்றோர். அவர்கள் பிழைப்புக்காக முட்டாள்தனமான செயல்கள் செய்வதில்லை. நாத அனுபவம் அற்றவர் பணிவாக நடப்பதில்லை. செவியின் சுவையை உணராமல் வாய்ச் சுவைக்கே முன்னுரிமைத் தரும் மனிடப் பதர்கள் வாழ்வதும் சாவதும் ஒன்றே.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.