திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: கல்லாமை / Ignorance

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு.



நல்லவருக்கு ஏற்பட்ட வறுமையை விட கொடியது கல்லாதவருக்கு ஏற்பட்ட உயர்வு



கல்லாதவனிடம் சேர்ந்துள்ள செல்வமானது, கற்றறிந்த நல்லவரிடம் உள்ள வறுமையைவிட மிகத்துன்பம் செய்வதாகும்.



படிக்காதவரிடம் இருக்கும் செல்வம், நல்லவரிடம் இருக்கும் வறுமையைக் காட்டிலும் கொடியது.



முட்டாள்களிடம் குவிந்துள்ள செல்வம், நல்லவர்களை வாட்டும் வறுமையைவிட அதிக துன்பத்தைத் தரும்.


To men unlearned, from fortune's favour greater-evil springs
Than poverty to men of goodly wisdom brings.


Wealth, gained by the unlearned, will give more sorrow than the poverty which may come upon the learned.



nallaarkaN patta vaRumaiyin innaadhae
kallaarkaN patta thiru


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

பல நூல்களை படிக்காமல் அரங்கம் ஏறுவது கட்டம் இல்லாமல் பகடை ஆடுவது போன்றது. படிக்காதவன் பேச முனைவது முலையில்லா பெண் காமுறுவதைப் போன்றது. எனவே கல்லாதவரின் சொல்லை கேட்க வேண்டாம் அது சோர்வை தரும், வறுமை தரும் துன்பத்தை விட அதிக துன்பம் தரும். சமூக ஏற்றத்தாழ்வு ஒழிக்கும் ஆற்றல் கல்விக்கு உண்டு. கல்லாதவர் உயர்குலப் பிறப்பு என்றாலும் அவர் தாழ்ந்தவரே. கல்லாதவர் விலங்குகளுக்கு ஒப்பானவர்களே.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.