திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: கல்லாமை / Ignorance

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்.



அரங்கம் இல்லாமல் வட்டாட்டம் ஆடுவதைப் போன்றதே நிறைந்த நூல்கள் இல்லாமல் கூட்டத்தைக் கூட்டுவது



அறிவு நிரம்புவதற்குக் காரணமானக் நூல்களைக் கற்காமல் கற்றவரிடம் சென்று பேசதல், சூதாடும் அரங்கு இழைக்காமல் வட்டுக்காயை உருட்டிஆடினார் போன்றது.



அறிவு வளர்ச்சிக்கு ஏற்ற நூல்களைக் கல்லாதவர், கற்றவர் அவையில் பேசுவது, கட்டம் போடாமல் தாயம் உருட்டுவது போலாம்.



நிறைந்த அறிவாற்றல் இல்லாமல் அவையில் பேசுவது ஆடுவதற்கான கட்டம் போட்டுக் கொள்ளாமலே சொக்கட்டான் விளையாடுவதைப் போன்றதாகும்.


Like those at draughts would play without the chequered square,
Men void of ample lore would counsels of the learned share.


To speak in an assembly (of the learned) without fullness of knowledge, is like playing at chess (on a board) without squares.



arangindri vattaati yatrae nirampiya
noolindrik koatti koLal


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

பல நூல்களை படிக்காமல் அரங்கம் ஏறுவது கட்டம் இல்லாமல் பகடை ஆடுவது போன்றது. படிக்காதவன் பேச முனைவது முலையில்லா பெண் காமுறுவதைப் போன்றது. எனவே கல்லாதவரின் சொல்லை கேட்க வேண்டாம் அது சோர்வை தரும், வறுமை தரும் துன்பத்தை விட அதிக துன்பம் தரும். சமூக ஏற்றத்தாழ்வு ஒழிக்கும் ஆற்றல் கல்விக்கு உண்டு. கல்லாதவர் உயர்குலப் பிறப்பு என்றாலும் அவர் தாழ்ந்தவரே. கல்லாதவர் விலங்குகளுக்கு ஒப்பானவர்களே.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.