திருவள்ளுவரின் திருக்குறள்

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.



பலசெயல்களை அறத்துடன் செய்யும் ஒருவருக்கு பழியும் பல உயர்வை தரும்.



ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே.



ஒருவன் செய்யத் தக்கது அறமே; விட்டுவிடத் தக்கவை தீய செயல்களே.



பழிக்கத் தக்கவைகளைச் செய்யாமல் பாராட்டத்தக்க அறவழிச் செயல்களில் நாட்டம் கொள்வதே ஒருவர்க்குப் புகழ் சேர்க்கும்.


'Virtue' sums the things that should be done;
'Vice' sums the things that man should shun


That is virtue which each ought to do, and that is vice which each should shun



seyaRpaala thoarum aRanae oruvaRku
uyaRpaala thorum pazhi


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

மனதால் நேர்மையடன் இருப்பதே அறம், அப்படி அறமுடன் இருப்பவர்க்கு செல்வமும், சிறப்பும் வளரும், மறுப்பவர் வாழ்வில் விழ்ச்சி உறுதி. அழிக்கும் குணம்,அளவற்ற ஆசை,கடுங் கோபம்,வன்மையான வார்த்தை இவை நான்கும் இல்லாமல் இருப்பதே அறம். அடுத்தவர் மதிக்கப்பட வேண்டும் என்று அறத்தை செய்யாமல் தனக்காக செய்யவேண்டும். அடிமையாக இருப்பது அறமாகாது. அறமே இன்பத்தை தரும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.