திருவள்ளுவரின் திருக்குறள்

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.



ஆராய முடியாத இயற்கை ஆசையை அகற்றினால் அதுபோன்றே நிலைத்த தன்மையை இயற்கை தரும்.



ஒருபோதும் நிரம்பாத தன்மை உடைய அவாவை ஒழித்தால் ஒழித்த அந்நிலையே எப்போதும் மாறாதிருக்கும் இன்ப வாழ்வைத் தரும்.



ஒரு காலமும் முடிவு பெறாத குணத்தை உடைய ஆ‌சையை விட்டுவிட்டால், அதுவே ஒருவனுக்கு நிலைத்து வாழும் இயல்பைக் கொடுக்கும்.



இயல்பாகவே எழும் அடங்காத பேராசையை அகற்றி வாழும் நிலை, நீங்காத இன்பத்தை இயல்பாகவே தரக்கூடியதாகும்.


Drive from thy soul desire insatiate;
Straight'way is gained the moveless blissful state.


The removal of desire, whose nature it is never to be satisfied, will immediately confer a nature that can never be changed.



aaraa iyaRkai avaanheeppin anhnhilaiyae
paeraa iyaRkai tharum


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

பிறப்பை தருவது ஆசை. தேவை என்று வேண்டுதல் செய்ய வேண்டும் என்றால் மீண்டும் பிறவாத நிலை மட்டுமே மற்றவை தானாகவே வரும். ஆசை அற்ற நிலையே தூய்மையானது. இதுவே இன்பத்தின் பிறப்பிடம்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.