திருவள்ளுவரின் திருக்குறள்

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.



எந்த பொருள் எந்த தன்மையுடையாதாக இருப்பினும் அந்த பொருளின் உண்மைத்தன்மையை அறிந்துக் கொள்வதே அறிவு.



எப்பொருள் எத்தன்மையதாய்த் தோன்றினாலும் (அத்தோற்றத்தை மட்டும் கண்டுமங்காமல்) அப் பொருளின் உண்மையான இயல்பை அறிவதே மெய்யுணர்வாகும்.



எந்தப் பொருளானாலும், அது எப்படிக் காட்சி தந்தாலும், அப்பொருளின் வெளித்தோற்றத்தைக் காணாமல், உள்ளடக்கமாகிய உண்மைப் பொருளைக் காண்பதே மெய்யுணர்தல்.



வெளித்தோற்றத்தைப் பார்த்து ஏமாந்து விடாமல், அதுபற்றிய உண்மையை உணர்வதுதான் அறிவுடைமையாகும்.


Whatever thing, of whatsoever kind it be,
'Tis wisdom's part in each the very thing to see.


(True) knowledge is the perception concerning every thing of whatever kind, that that thing is the true thing.



epporuL eththanmaith thaayinum apporuL
meypporuL kaaNpadhu aRivu


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

உண்மை பொருள் எது என அறியாமல் உலகில் உள்ளவற்றை எல்லாம் பொருள் என எண்ணவதே இழிவானப் பிற்ப்பு. மாசு இல்லா காட்சியே இருளை நீக்கும். காட்சி அறியும் கண்களும் பயன் அற்றது உண்மை அறியாவிடின். மெய்பெபொருள் காணும் அறிவே அறிவு. பெயருக்கு கேடு உண்டாக்கும் காமம் வெகுளி மயக்கம் அழித்தால் நோய் இல்லை.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.