திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: புகழ் / Renown

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்.



சிறப்பாக வாழாதவர்கள் தன்னை கடிந்துக் கொள்ளாமல் தன்னை இழிவாக பேசுபவரை கடிந்துகொல்வதால் என்ன பயன்.



தமக்குப் புகழ் உண்டாகுமாறு வாழமுடியாதவர் தம்மைத் தாம் நொந்து கொள்ளாமல் தம்மை இகழ்கின்றவரை நொந்து கொள்ளக் காரணம் என்ன?.



புகழ் பெருகுமாறு வாழமுடியாதவர் அதற்குக் காரணர் தாமே என்று தம்மீது வருந்தாமல், தம்மை இகழ்வார் மீது வருத்தம் கொள்வது எதற்காக?.



உண்மையான புகழுடன் வாழ முடியாதவர்கள், அதற்காகத் தம்மை நொந்து கொள்ள வேண்டுமே தவிரத் தமது செயல்களை இகழ்ந்து பேசுகிறவர்களை நொந்து கொள்வது எதற்காக?.


If you your days will spend devoid of goodly fame,
When men despise, why blame them? You've yourself to blame.


Why do those who cannot live with praise, grieve those who despise them, instead of grieving themselves for their own inability.



pukazhpata vaazhaadhaar thannhoavaar thammai
ikazhvaarai noavadhu evan


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

கொடுப்பதும் ஒத்திசைவு கொள்ளவதுமே ஒர் உயிரின் ஊதியம். கொடுக்கும் ஒருவரை புகழ்வதே சிறந்த பேச்சாக அமையும். தன் குற்றத்தை திருத்திக் கொள்ளாமல் அடுத்தவரை கடிந்துக் கொள்வது குற்றம். புகழோடு தோன்றுவதே சரியானது. குற்றமற்றவரே வாழ்பவர்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.