திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: வெஃகாமை / Not Coveting

அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்.



புரிதல் அற்ற (மனச் சிதைவு)அறிவாகிவிடும் யாராக இருப்பினும் வேட்கை கொண்டு வெறியுடன் நடந்தால்.



யாரிடத்திலும் பொருளைக் கவர விரும்பிப் பொருந்தாதவற்றைச் செய்தால், நுட்பமானதாய் விரிவுடையதாய் வளர்ந்த அறிவால் பயன் என்ன?.



பிறர் பொருள் மீது, ஆசை கொண்டு எவரிடத்திலும் அறிவற்ற செயல்களைச் செய்தால் செய்பவரின் கூரிய, பல நூல் பயின்று பரந்த அறிவினால் அவருக்கு ஆகும் பயன்தான் என்ன?.



யாராயிருப்பினும் அவரது உடைமையை அறவழிக்குப் புறம்பாகக் கவர விரும்பினால் ஒருவருக்குப் பகுத்துணரும் நுண்ணிய அறிவு இருந்துதான் என்ன பயன்?.


What gain, though lore refined of amplest reach he learn,
His acts towards all mankind if covetous desire to folly turn?.


What is the advantage of extensive and accurate knowledge if a man through covetousness act senselessly towards all ?.



aqki akandra aRivennaam yaarmaattum
veqki veRiya seyin


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

நடுநிலையற்ற வேட்கை நல்லதல்ல. பேரின்ப வீட்டுற்கு அது தடையாக இருக்கிறது. ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு வேட்கை அவசியம் என்றாலும் அடுத்தவரின் பொருள் மேல் ஆர்வம் கொள்ளுதல் கூடாது. வேட்கையை விட வேண்டாம் என்ற செருக்கு இன்பம் தரும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.