திருவள்ளுவரின் திருக்குறள்

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து.



ஒழுக்கத்தில் தவறாதவர்கள் உயர்ந்தவர்கள், அவர்கள்இழுக்கத்தின் அவல நிலை அறிந்து உள்ளார்கள்.



ஒழுக்கம் தவறுதலால் குற்றம் உண்டாவதை அறிந்து, மனவலிமை உடைய சான்றோர் ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வர்.



ஒழுக்கம் இழந்தால் தனக்குக் குலத்தாழ்வு உண்டாகும் என அறியும் மன உறுதி உடைய பெரியோர், கடினமே என்றாலும் ஒழுக்கத்திலிருந்து விலகமாட்டார்.



மன உறுதி கொண்டவர்கள் ஒழுக்கம் தவறுவதால் ஏற்படும் இழிவை உணர்ந்திருப்பதால், நல்லொழுக்கம் குன்றிடுமளவிற்கு நடக்க மாட்டார்கள்.


The strong of soul no jot abate of 'strict decorum's' laws,
Knowing that 'due decorum's' breach foulest disgrace will cause


Those firm in mind will not slacken in their observance of the proprieties of life, knowing, as they do, the misery that flows from the transgression from them



ozhukkaththin olkaar uravoar izhukkaththin
Edham padupaak kaRindhu


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

வாழ்தலுக்கான வரைமுறையே ஒழுக்கம் அது வீடுபெறு அடைய உதவும் என்பதால் உயிரைவிட போற்றவேண்டும். ஒழுகத்தின் வெளிப்பாடே குடும்பம். நல்லெழுக்கம் என்பதே நன்றியுணர்வுடன் இருப்பது. அதிலும் உலகத்துடன் ஒத்திசையும் படி நடப்பவர் கற்று அறிந்தவர்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.