திருவள்ளுவரின் திருக்குறள்

கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று.



கண்ணையும் உடன் கொண்டு சேர் என் நெஞ்சே இவைகள் என்னை தின்றுவிடும் அவரை காணமுடிய நிலைக் கண்டு.



நெஞ்சே! நீ அவரிடம் செல்லும்போது என் கண்களையும் உடன் கொண்டு செல்வாயாக; அவரைக் காணவேண்டும் என்று இவை என்னைப் பிடுங்கித் தின்கின்றன.



நெஞ்சே! நீ அவரைக் காணச் சென்றால் என் கண்களையும் உடன் கொண்டு செல். அவற்றை விட்டுவிட்டு நீ போய் விடுவாயானால் அவரைக் காண விரும்பும் என் கண்கள் என்னைத் தின்பன போல வருந்தும்.



நெஞ்சே! நீ காதலரிடம் செல்லும் போது கண்களையும்கூட அழைத்துக்கொண்டு போ; இல்லையேல் அவரைக் காண வேண்டுமென்று என்னையே அவை தின்று விடுவது போல் இருக்கின்றன.


O rid me of these eyes, my heart; for they,
Longing to see him, wear my life away.


O my soul! take my eyes also with you, (if not), these would eat me up (in their desire) to see him.



kannum kolachchaeri nenje ivaiyennaith
thinnum avarkkaanal utru


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

யோசனை செய்து சொல் என் நெஞ்சே காம நோய் தீர்க்கும் மருந்து எது. காதலிக்காத அவரை மறக்காமல் இருக்கும் என் நெஞ்சே நீ வாழ்க. அவரை நினைத்தபடி இருக்கும் உனக்கு அவர் மறந்தபடி இருப்பது தெரிந்தும் சிறுமைபட்டு இருக்கிறாயே. இறையாகிய காதலரை காண இயலவில்லை என்றால் என் கண்களை கொன்றுவிடு என் நெஞ்சே. உறவுகொண்டவர் உறவு இல்லாது போனலும் கைவிடாமல் உறவு கொள்கிறாய் என் நெஞ்சே. தாகத்தை மறைத்து இன்பத்தை தவிர்க்கிறாய் என் நெஞ்சே. காமத்தை விட முடியுமா நாணத்தை விடு என் நெஞ்சே. பரிவற்று பிரிந்தவர் பின் செல்கிறாயே என் நெஞ்சே. உள்ளே இருக்கும் அவரை பேய் போல் பிடிக்க பார்க்கிறாயே நெஞ்சே.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.