திருவள்ளுவரின் திருக்குறள்

காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை.



காலைப் பொழுதுக்கு என்ன நன்றி செய்தேனோ எப்படி அறிய முடியுமோ மாலைப் பொழுதுக்கு செய்த பகை.



யான் காலைப்பொழுதிற்குச் செய்த நன்மை என்ன? (என்னைத் துன்புறுத்துகின்ற) மாலைப் பொழுதிற்குச் செய்த பகையான தீமை என்ன?.



காலைக்கு நான் செய்த நன்மை என்ன? மாலைக்கு நான் செய்த தீமை என்ன?.



மாலைப் பொழுதாகிவிட்டால் காதல் துன்பம் அதிகமாக வருத்துகிறது. அதனால் பிரிந்திருக்கும் காதலர் உள்ளம் காலை நேரத்துக்கு நான் செய்த நன்மை என்ன? மாலை நேரத்துக்குச் செய்த தீமைதான் என்ன? என்று புலம்புகிறது.


O morn, how have I won thy grace? thou bring'st relief
O eve, why art thou foe! thou dost renew my grief.


What good have I done to morning (and) what evil to evening?.



Kaalaikkuch Cheydhanandru Enkol Evankolyaan
Maalaikkuch Cheydha Pakai?


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

மாலையோ இல்லை மணமானவர்கள் உயிர் வாங்கும் வேலையோ எப்படி இருப்பினும் உன்னை வாழ்த்துகிறேன். உன் துணையும் என் துணை போன்று பிரிந்து கூடும் ஒன்றோ பனி போல் துளித்து அரும்புகிறதே. காதலர் இல்லாத பொழுது வரும் மாலை ஒரு கொலைகளத்து எதிலர் போல் இருக்கிறது. காலை பொழுதிற்கு நன்றியும் மாலை பொழுதிற்கு பகையும் ஆனாது எனோ?. மாலை தரும் துன்பம் அவருடன் இருந்த காலத்தில் அறியவில்லை. காலை அரும்பி பகலில் போதாகி மாலையில் மலரும் இந்த காமநோய். போர்களத்து ஓசையாக இருக்கிறது இந்த மாலை. நிலவும் மயங்கி நிலை குலைகிறது மாலை பொழுதில். ஒயாத உயிரும் மாய்கிறது பொருள் தேடி சென்ற தலைவன் நினைவால்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.