திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: நாணுடைமை / Shame

நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர்.



தவறு செய்ய அஞ்சும் நாணுடைமை கொண்டமையால் உயிரை துறப்பார்கள். உயிர் வாழ வேண்டி நாணுடைமையை துறக்காதவரே நாணுடைமை ஆள்பவர்.



நாணத்தை தமக்கரிய பண்பாகக் கொள்பவர் நாணத்தால் உயிரை விடுவர், உயிரைக் காக்கும் பொருட்டாக நாணத்தை விட மாட்டார்.



நாணத்தின் சிறப்பை அறிந்து அதன் வழி நடப்பவர் நாணமா, உயிரா,என்ற நெருக்கடி வரும்போது உயிரையே விடுவர்; உயிரைக் காக்க நாணத்தை விடமாட்டார்‌.



நாண உணர்வுடையவர்கள், மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள உயிரையும் விடுவார்கள். உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மானத்தை விடமாட்டார்கள்.


The men of modest soul for shame would life an offering make,
But ne'er abandon virtuous shame for life's dear sake.


The modest would rather lose their life for the sake of modesty than lose modesty for the sake of life.



naaNaal uyiraith thuRappar uyirpporuttaal
naaNdhuRavaar naaNaaL pavar


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

செய்யப்படும் செயல்களைக் கொண்டு நாணுவதும் பெண் நாணுவதும் வெவ்வெறு தன்மை உடையது. உயிர் மீது பற்றும் உடல் அழுக்கை அகற்றுவதும் எல்லா உயிர்களுக்கும் சமம் மனிதனுக்கு மட்டுமே நாணுதல் எனும் சிறப்புள்ளது. நாணமே முன்னோடிக்கு அணி, தற்காப்பு கவசம். நாணம் உள்ளவர்கள் உயிரை துறக்க தயங்குவது இல்லை. நாணம் அற்றவர்களை அறம் காப்பதில்லை. நாணம் இல்லாதவர் மரப் பொம்மை போன்றவர்..


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.