ஔவையாரின் ஞானக்குறள்

ஆதியாய் நின்ற வறிவு முதலெழுத்
தோதிய நூலின் பயன்.


பரமாய சத்தியுட் பஞ்சமா பூதந்
தரமாறிற் றோன்றும் பிறப்பு.


ஓசை பரிச முருவஞ் சுவைநாற்ற
மாசை படுத்து மளறு.


தருமம் பொருள்காமம் வீடெனு நான்கு
முருவத்தா லாய பயன்.


நிலமைந்து நீர் நான்கு நீடங்கி மூன்றே
யுலவை யிறண்டொன் றுவிண்.


மாயன் பிரமனு ருத்திரன்ம கேசனோ
டாயுஞ் சிவமூர்த்தி யைந்து.


மாலய னங்கி யிரவி மதியுமையோ
டேலும் திகழ்சத்தி யாறு.


தொக்கு திரத்தோடூன் மூளை நிணமென்பு
சுக்கிலந் தாதுக்க ளேழு.


மண்ணோடுநீ ரங்கி மதுயொடு காற்றிரவி
விண்ணெச்ச மூர்த்தியோ டெட்டு.


இவையெல்லாங் கூடி யுடம்பாய வொன்றி
னவையெல்லா மானது விந்து.



Meta Information:
மோட்சம் செல்லும் வழி, வீட்டு நெறிப்பால் | ஞானக்குறள்,அவ்வைக்குறள் avvaikural,chapter,athigaram,section,310,tamil avvaikural