ஔவையாரின் ஞானக்குறள்

அதிகாரம்: கலை ஞானம்

சத்தியாஞ் சந்திரனைச் செங்கதிரோ னூடுருவில்
முத்திக்கு மூல மது.


அயனங்கொள் சந்திரனா லாதித்த னொன்றில்
நயனமா முத்திக்கு வீடு.


அஞ்சாலு மாயா தறம்பொரு ளின்பமுந்
துஞ்சா தவர்துறக்கு மாறு.


ஈசனோ டொன்றி விசையாப் பொருளில்லை
தேச விளக்கொளியே யாம்.


தாஞ்செய் வினையெல்லாந் தம்மை யறவுணரில்
காஞ்சனமே யாகுங் கருத்து.


கூடக மான குறியெழுத்தைத் தானறியில்
வீடக மாகும் விரைந்து.


வீடக மாக விழைந்தொல்லை வேண்டுமேல்
கூடகத்திற் சோதியோ டொன்று.


பூரித்து நின்ற சிவனைப் புணரவே
பாரித்த தாகுங் கருத்து.


இரேசக மாற்றி யிடையறா தேநிற்கில்
பூரிப்ப துள்ளே சிவம்.


சிந்தையில் நின்ற நிலைவிசும்பிற் சாக்கிரமாம்
சந்திரனிற் றோன்று முணர்வு.



Meta Information:
கலை ஞானம், திருவருட்பால் | ஞானக்குறள்,அவ்வைக்குறள் avvaikural,chapter,athigaram,section,310,tamil avvaikural