மனத்தோ டுறுபுத்தி யாங்காரஞ் சித்தம்
அனைத்தினு மில்லை யது.
வாக்குங் கருத்து மயங்குஞ் சமயங்கள்
ஆக்கிய நூலினு மில்.
உருவமொன் றில்லை யுணர்வில்லை யோதும்
அருவமுந் தானதுவே யாம்.
தனக்கோ ருருவில்லை தானெங்கு மாகி
மனத்தகமாய் நிற்கு மது.
பெண்ணா ணலியென்னும் போரொன் றிலதாகி
விண்ணாகி நிற்கும் வியப்பு.
அனைத்துருவ மாய வறிவை யகலில்
தினைத்துணையு மில்லை சிவம்.
துணிமுகத் துக்காதியாத் துன்னறி வின்றி
அணிதா ரிரண்டு விரல்.
மயிர்முனையிற் பாதி மனத்தறி வுண்டேல்
அயிர்ப்புண்டங் காதி நிலை.
தற்பர மான சதாசிவத் தோடொன்றில்
உற்றறி வில்லை யுயிர்க்கு.
உறக்க முணர்வு பசிகெடப் பட்டால்
பிறக்கவும் வேண்டா பிறப்பு.
முத்தி காண்டல், திருவருட்பால் | ஞானக்குறள்,அவ்வைக்குறள் avvaikural,chapter,athigaram,section,310,tamil avvaikural